National Education Day – 2022

புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக தேசிய கல்வி தினம் (National Education Day) கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும்,கல்வி அமைச்சராக அவர்களின் பணிகள் குறித்தும்,

காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசியத் தலைவராக மெளலானா அவர்கள் ஆற்றிய சமூக சீரமைப்புகள் குறித்தும் ஜாமிஅத்துல் ஹிக்மா மாணவர்கள் கருத்துரை நிகழ்த்தினார்கள்.

இறைவனுடைய அருளால் ஆற்றல்மிக்க சட்ட வல்லுனர்களையும், அதிகாரமிக்க IAS – IPS அதிகாரிகளையும் உருவாக்கும் இலக்குடன் பைத்துல் ஹிக்மா நிறுவனம் உருவாகி வருகிறது.