மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு – 2023

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ மாணவிகளுக்கான மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு இன்ஷா அல்லாஹ் மே18. வியாழன் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள LKS மஹாலில் நடைபெற உள்ளது.

கருத்தரங்கம் – கண்காட்சி – வழிகாட்டி மய்யம் என்று உயர்கல்வியை தேர்வு செய்யும் உம்மத்தின் பிள்ளைகளுக்கான வாழ்வியல் இலக்கு நிர்ணயிக்கும் நிகழ்ச்சியாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப்பணி,நீதித்துறை,அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகள், அரபுலகில் ஆளுமைமிக்க பொறுப்புகள் என்று நமது பிள்ளைகளிடம் இலக்கு நிர்ணயித்து குறிவைத்து ப(அ)டிக்கும் பண்புகளை இனியாவது உருவாக்குவோம்.

உங்கள் வீட்டில் அல்லது உங்கள் மஹல்லாவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள ஆண் பெண் பிள்ளைகளை இந்த மாநாட்டிற்கு கட்டாயம் அழைத்து வாருங்கள். அங்கே சொல்லப்படும் செய்திகளை அவர்களுக்கு கவனப்படுத்துங்கள். அது அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சியையும், முஸ்லிம் உம்மத்திற்கு கண்ணியத்தையும் நிச்சயம் கொண்டு வரும்.

எத்தனையோ மாநாடுகளுக்கு தன்னார்வத்துடன் சென்றுள்ள நீங்கள் உங்கள் சந்ததிகளின் எதிர்காலத்திற்கு வளம் சேர்க்கும் இந்த மாநாடுக்கு மாணவ மாணவிகளை அழைத்து வாருங்கள்.

நன்றி

இப்படிக்கு….

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்.