நான்காம் ஆண்டு நிறைவு விழா

மார்க்க கல்வி படித்தவர்களை TNPSC / UPSC தேர்வுகளுக்கு தயார் செய்து அரசின் உயர் அதிகாரப் பொறுப்புகளுக்கு உருவாக்கும் சேவை நிறுவனமாக புதுச்சேரி பைத்துல் ஹிக்மா கட்டமைக்கப்பட்டு வருகிறது.

தற்சமயம் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி ஸ்கூல் ஆப் சிவில் சர்வீஸ் என்ற IAS அகாடமியும் இயங்கி வருகிறது.

இதல்லாமல் கல்வி மற்றும் தொழில் ரீதியான பல்வேறு பயிற்சி வகுப்புகள் பைத்துல் ஹிக்மாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

ஜாமிஅத்துல் ஹக்மா அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா 27- 3 – 2022 ஞாயிறு அன்று ஜாமிஆவின் முதல்வர் மெளலானா முஹம்மது கான் பாகவி ஹஸ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.