இன்றைய காலத்திலும் இனிவரும் காலத்திலும் அறிவாற்றலும் பொருளாற்றலுமே

இன்றைய காலத்திலும் இனிவரும் காலத்திலும் அறிவாற்றலும் பொருளாற்றலுமே ஒரு சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்புக்கான அதிகாரங்கள்.

மூஃமினான பிள்ளைகளுக்கு இலக்கு நிர்ணயித்துக் கொடுத்து தொடர்ச்சியாக வழிகாட்டுவதின் மூலம்தான் இந்த இரண்டு ஆற்றல்களையும் அடைய முடியும்.அதன் மூலம் தான் நிலையான சமூக மாற்றங்களும் சாத்தியப்படும்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் 10/12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 15 நாட்கள் தலைமைத்துவப் பயிலரங்கத்தின் நிறைவு விழா பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிகச்சரியான உயர்கல்விப் பிரிவுகளை கவனப்படுத்தி,அதை அடைய நீண்டகாலம் உழைப்பதற்கான மனநிலைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பெற்றோர்களே…..ஆண் பிள்ளைகளிடம் அன்பையும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வையும் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் இடைவிடாமல் விதையுங்கள்.

Leave a Reply